முன் உறுப்பில் கை வைத்து பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டு நபர் கைது

molest-arrest-lorong-18-geylang
Google Maps

பெண்ணிடம் தகாத சீண்டலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 29 வயது வெளிநாட்டு ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லோரோங் 18 கெய்லாங் அருகே உள்ள பட்ஜெட் ஒன் ஹோட்டலுக்கு வெளியே கடந்த ஜூன் 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிங்கப்பூருக்கு மட்டும்: புதிய சிறப்பு அம்சங்களுடன் WhatsApp அப்டேட்

அங்கு பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அன்று நள்ளிரவு 1:25 மணியளவில் போலீசாருக்கு புகார் கிடைத்தது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இதில் கைதான அந்த சந்தேக நபர் வியட்நாம் நாட்டவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

35 வயதுமிக்க பெண்ணின் மார்பகத்தை பிடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் மீது நேற்று ஜூன் 9 அன்று, பெண்ணை மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஊழியர்களை வேலை விட்டு நீக்கும் நிறுவனங்கள் – தொடரும் ஆட்குறைப்பு