சிங்கப்பூரில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Pic: Today/File

சிங்கப்பூரில் திங்கள்கிழமை (நவம்பர் 8) நிலவரப்படி, புதிதாக 2,470 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், 14 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய அப்டேட்

இறந்தவர்கள் 56 மற்றும் 98 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அது கூறியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன. இந்த பிரச்சனைகள் என்ன என்பதை அமைச்சகம் குறிப்பிடவில்லை.

இதனால் சிங்கப்பூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 511ஆக உயர்ந்துள்ளது.

புதிய பாதிப்புகளில் சமூக அளவில் 2,307 பேரும் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 156 பேரும் அடங்குவர்.

சிங்கப்பூர்-மலேசியா இடையே தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான தனிமை இல்லா சிறப்பு பயணம்