விபத்தில் ஆடவர் & சிறுவன் மரணம்: மோதிவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் கைது

Motorcyclist pillion fatal accident
Shin Min Daily News

பான்-தீவு விரைவுச்சாலையில் (PIE) நேற்று (நவ.11) நடந்த விபத்தில் தொடர்புடைய டிரக் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்த லாரி மோதிய விபத்தில் சிக்கிய 39 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த ஒன்பது வயது சிறுவரும் உயிரிழந்தனர்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தாக்கிய வெளிநாட்டு ஊழியர்… ஆணா இல்லை பெண்ணா? முதலாளிக்கே குழப்பம்

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 68 வயதான டிரக் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக Lianhe Zaobao கூறியுள்ளது.

மரணித்த இருவரும் தந்தை மற்றும் மகன் என்பதை புரிந்து கொள்வதாக ஊடகங்கள் கூறுகின்றன.

ஜலான் பஹார் வெளியேறும் இடத்திற்கு அருகே, சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் பான்-தீவு விரைவுச்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்து நேற்று காலை 10.10 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்