நாயை காப்பாற்ற முயன்ற முதியவர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சோகம்

malaymalaysian-man-dies-dog-catcherssian-man-dies-dog-catchers
Sin Chew

நாய் பிடிப்பவர்களிடமிருந்து நாயை காப்பாற்ற முயன்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் தனது வளர்ப்பு நாயை தூக்கிச் செல்ல முயன்ற மாநகர அதிகாரிகளிடம் இருந்து அதைக் காப்பாற்ற போராடிய போது அவர் வடிகாலில் விழுந்து உயிரிழந்தார்.

விடுதி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஞ்சி விடுதிக்கு வரும் வசதி.. அனைத்தும் ஒரே இடத்தில்

85 வயதுமிக்க அந்த முதியவர், தனது நாயை பிடித்த அதிகாரிகளின் கைகளில் இருந்து நாய்பிடி கருவியை பறிக்க முயன்ற போது தவறி விழுந்து இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவரின் உயிர் பிரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த மே 24 அன்று பகாங் – பெண்டாங்கில் உள்ள தாமன் சாகாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் 40°C போல பொளக்கும் வெயில்… கடும் இன்னலுக்கு ஆளாகும் ஊழியர்கள்