பயனியரில் (Pioneer) கனரக வாகனமான ட்ரெய்லர், லாரி மற்றும் கார்கள் மோதி விபத்து

PHOTO: SCDF/FACEBOOK

பயனியரில் (Pioneer) கனரக வாகனமான ட்ரெய்லர், லாரி மற்றும் இரண்டு கார்கள் ஆகியவை இடையே நேற்று (அக்டோபர் 11) பிற்பகல் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆடவர் ஒருவர் காரில் சிக்கி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள குழந்தைகளை பார்க்க முடியாமல் புற்றுநோயால் அவதிப்பட்ட தாய் – கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூர்

ஜலான் அஹ்மத் இப்ராகிம் மற்றும் பெனோய் சாலை சந்திப்பில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

முகநூல் பதிவின்படி, சிங்கப்பூர் குடிமைத் பாதுகாப்பு படை (SCDF) அன்று நண்பகல் 12.20 மணியளவில் உதவி வேண்டி அழைப்பைப் பெற்றதாகக் கூறியது.

PHOTO: SCDF/FACEBOOK

54 வயதான ஓட்டுனரும் அவரது இரண்டு பயணிகளும், (53 வயது ஆணும், 48 வயதான பெண்ணும்) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் SCDF கூறியது.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர் விடுதி உட்பட 2 குழுமங்கள் கண்காணிப்பில்… விடுதியில் மொத்தம் 237 பாதிப்புகள் பதிவு