நவராத்திரி விழா: ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்!

நவராத்திரி விழா: ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்!
Photo: HEB

 

நவராத்திரி விழாவையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகிறது.

“அனைத்து விதமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும்” – சிங்கப்பூர் பயண ஆலோசனை

நவராத்திரி விழா: ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்!
Photo: HEB

அந்த வகையில், நவராத்திரி விழாவின் நான்காவது நாளான நேற்று (அக்.18) ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உற்சவ சிலைக்கு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவராத்திரி விழா: ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்!
Photo: HEB

அதேபோல், ஸ்ரீ சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அம்மன் உற்சவருக்கு ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. அதேபோல், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஸ்ரீ கஜ லெக்ஷ்மி அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

டிப்பர் லாரியுடன் விபத்து.. 38 வயதுடைய பெண் மரணம்

இதில், 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, மாலை நேரங்களில், பக்தி இசை நிகழ்ச்சிகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.