நவராத்திரியையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்!

நவராத்திரியையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்!
Photo: HEB

 

சிங்கப்பூரில் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு உட்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் நவராத்திரியையொட்டி, நாள்தோறும் உற்சவர் சிலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

தெம்பனீஸ் அவென்யூ 4ல் இரட்டை அடுக்கு பேருந்தில் தீ

அந்த வகையில், நவராத்திரியின் மூன்றாவது நாளான நேற்று (அக்.17) சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. அதேபோல், உற்சவர் சிலைக்கு ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அனைத்தும் நிராகரிப்பு

இதில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், அம்மனுக்கு செய்யப்பட்ட அலங்காரங்களைக் கண்டு வியந்தனர். அத்துடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.