நவராத்திரி திருவிழாவின் 3-வது நாளான இன்று (அக்.17) சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஸ்ரீ மஹா மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சாங்கி விமான நிலையத்தில் விமான பணிப்பெண் சீருடை அணிந்து வந்த குட்டி தேவதை – புன்னகைத்த ஊழியர்கள்
அதேபோல், ஸ்ரீ சிவன் கோயிலில், அம்மன் உற்சவருக்கு ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீ வைராவிட காளியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ சிவன் கோயிலில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.