சிங்கப்பூரில் தேசிய தினக் கொண்டாட்டங்களின் முக்கிய பகுதியாக வாணவேடிக்கைகள் நடைபெறும், இந்த முறை சிங்கப்பூரில் 10 இடங்களில் கண்கவர் வாணவேடிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதன் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே தங்கி கண்கவர் காட்சியை ரசிக்குமாறு அறிவுறுத்துப்படுகின்றனர்.
இதையும் படிங்க : பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்ப முடியும் – அமைச்சர் லாரன்ஸ் வோங்..!
வாணவேடிக்கைகள் நடைபெறும் 10 இடங்கள்:
- ஆங் மோ கியோ
- பிஷன்
- புவன விஸ்டா
- ஜுராங் லேக் கார்டன்ஸ்
- மெரினா நீர்த்தேக்கம்
- பொங்கோல்
- செம்பவாங்
- தெம்பனிஸ்
- உட்லேண்ட்ஸ்
- இயூ டீ
மற்ற எட்டு இடங்கள் திறந்திருக்கும் அதே வேளையில், அதிக மக்கள் கூட்டம் வருவதைத் தவிர்க்க, ஜுராங் லேக் கார்டன்ஸ் மற்றும் மெரினா நீர்த்தேக்கம் ஆகியவை பொதுமக்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்து இடங்கள் ஏற்பாடு செய்ததன் நோக்கம் வீட்டில் இருந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக என்று NDP2020 வாணவேடிக்கை ஏற்பாடு குழுவின் தலைவர் ராணுவ நிபுணர் 6 பென் டான் கூறினார்.
எனவே சிங்கப்பூரர்களை அவர்களது வீடுகள் அல்லது நேரடி ஒளிபரப்பு மூலமாக வாணவேடிக்கைகளை ரசிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்