சிங்கப்பூரில் உள்ள ஆடவர்கள் அதிகமானோர் முன்கூட்டியே புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தபட்டுள்ளது.
குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate cancer) ஆடவர்களிடையே அதிகமாக காணப்படுவதால் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம் ஆகியவை இந்த பொதுநல தகவலை வெளியிட்டு கேட்டுக்கொண்டன.
புரோஸ்டேட் புற்றுநோய் சிங்கப்பூரில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக காணப்படுகிறது.
சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம், ஆண்களுக்கான சுகாதார விழா ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஆண்டுக்கு சுமார் 1,400 ஆடவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதாகவும், 200க்கும் அதிகமானோர் இதனால் இறப்பதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
மலக்குடல் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவையும் ஆடவர்களை அதிகம் பாதிக்கின்றன.