சிங்கப்பூரில் அண்மை வாரங்களாக, முன்னர் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட சில தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி மேலும் மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு – தூதரகம்..!
புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள்:
- 15 Penjuru Walkஇல் உள்ள Cassia @ Penjuru தங்கும் விடுதி
- 6 துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 15இல் அமைந்துள்ள CDPL துவாஸ் தங்கும் விடுதி
- 12 Kranji ரோட்டில் உள்ள Kranji Lodge 1
ஆகியவற்றில் புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளது.
Cassia @ Penjuru தங்கும் விடுதி
முந்தைய 13 சம்பவங்கள் Cassia @ Penjuru தங்கும் விடுதியுடன் தொடர்புடையது. கடந்த ஆகஸ்ட் 10 அன்று மனிதவள அமைச்சகத்தால் (MOM) இந்த விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 1,900க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.
Mandai Lodge 1
முந்தைய 5 சம்பவங்கள் Mandai Lodge 1 உடன் தொடர்புடையது. கடந்த ஆகஸ்ட் 8 அன்று மனிதவள அமைச்சகத்தால் (MOM) இந்த விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 670க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.
துவாஸ் சவுத் தங்கும் விடுதி
அண்மையில் 7 சம்பவங்கள் துவாஸ் சவுத் தங்கும் விடுதியுடன் தொடர்புடையது. கடந்த ஆகஸ்ட் 10 அன்று, இந்த விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 2,000க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப இன்னும் 15,000 பேர் காத்திருப்பு..!