இந்த 2022ஆம் புத்தாண்டு தினத்தை கொண்டாட பட்டாசு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
இதில் வெடித்து சிதறிய பட்டாசு தீப்பொறி Ubi அவென்யூ 1, HDB பிளாட் வீட்டின் ஜன்னல் ஒன்றைத் தாக்கியது.
கேமராவில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் பின்னர் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்
இந்த சம்பவம் குறித்த தகவலை, கெம்பாங்கன்-சாய் சீ சமூக நிலையம் இன்று (ஜனவரி 1) பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது.
இதில், கெம்பாங்கன்-சாய் சீ சமூக நிலையத்தை சேர்ந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவர்களது வீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் குடும்பத்தினர் பணியாளர்களிடம் உறுதியளித்தனர்.
பிரதமர் லீயின் புத்தாண்டு பரிசு: அதிக தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் நுழைய ஏற்பாடு!