ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஜனவரி 01- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களாலும், ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
“இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்
ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 01- ஆம் தேதி அன்று கோயில்களில் குவிந்த பக்தர்கள், 2024- ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவும், வளர்ச்சி மிகுந்த ஆண்டாகவும் அமைய பிரார்த்தனைச் செய்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புத்தாண்டு அன்று கோயில்களில் நடந்த சிறப்புப் பூஜைகள் குறித்த புகைப்படங்களை அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது இந்து அறக்கட்டளை வாரியம்.