நார்த் பிரிட்ஜ் சாலையில் விபத்து: ஆடவர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது..!

North Bridge Road accident death
(Photo: Facebook/Singapore roads accident.com)

நார்த் பிரிட்ஜ் சாலையில் நேற்று (மார்ச் 30) ஏற்பட்ட விபத்தில் 73 வயது ஆடவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் 12.41 மணியளவில், நார்த் பிரிட்ஜ் சாலையில் சவுத் பிரிட்ஜ் சாலை நோக்கி செல்லும் டாக்ஸி மற்றும் ஒரு பாதசாரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிவேக ரயில் திட்ட செலவு $102.8 மில்லியனை சிங்கப்பூருக்கு திருப்பி கொடுத்த மலேசியா..!

நார்த் பிரிட்ஜ் சாலையில் அதிகாலை 12.40 மணியளவில் சாலை விபத்து குறித்து SCDF படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அதில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், 55 வயதான டாக்ஸி ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் படங்களில் ComfortDelGro டாக்ஸி சம்பவ இடத்தில் இருப்பதை காணமுடிகிறது.

தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகின்றன.

மன அழுத்தம் மற்றும் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் – வெளியே செல்ல எப்போது அனுமதி?