நவ.10- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

Photo: Sri Sivan Temple

 

நவம்பர் 10- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிரதோஷத்தையொட்டி (Prathosham Prayers), சிங்கப்பூரின் எண் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple) பிரதோஷ பூஜை நடைபெறும் என இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது. இந்த விஷேச பூஜையில் கலந்து கொண்டு பக்தர்கள் சிவபெருமானின் அருளைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியா செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் https://sst.org.sg/ என்ற கோயில் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்திவிடுவார்கள்.

லாரி, சிற்றுந்து மற்றும் பைக் விபத்து: 27 வயதுமிக்க ஆடவர் மரணம் – பயணி ஒருவர் கைது

பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.