உள்ளூர் ஊழியர்களை பாதுகாக்கும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு; தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்.!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரின் உள்ளூர் ஊழியர்களை அனைத்துலகப் போட்டித்தன்மை, பொருளியல் இடையூறுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அரசின் முயற்சிகளுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக அதன் துணைத் தலைமை செயலாளர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) தெரிவித்துள்ளார்.

ஊழியர் அணியில் உள்ள சிங்கப்பூரர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகளில் முதலீடு செய்யவும் உறுதி அளிப்பதாக சீ ஹொங் டாட் முகநூல் பதிவில் கூறினார்.

புதிதாக 145 புதிய உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு; மக்கள் ஆர்வம்.!

சிங்கப்பூரில் ஆள்சேர்ப்புக்கும் மற்றும் வேலையில் முன்னேற்றம் அடைவதற்கும் சிங்கப்பூரர்கள் நியாயமாக மதிப்பிடப்படுவார்கள் என்பதை உறுதிசெய்ய தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தொடர்ந்து பணியாற்றும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் பொருளியலுக்கு தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் எந்த அளவு முக்கியம் என சுகாதார அமைச்சர் Ong Ye Kung மற்றும் மனிதவள அமைச்சர் Tan See Leng சென்ற வாரம் அமைச்சர் நிலை அறிக்கைகளை வெளியிட்டனர்.

வேலையிட பாகுபாடு, தொல்லைக்கு எதிராக வலுவான சட்டங்கள் வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை