சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற ஆடவர் கைது (காணொளி)

(Photo: Mothership)

Buangkok பகுதியில் முகக்கவசம் அணிந்து நிர்வாணமாக நடந்து சென்ற 51 வயதுமிக்க ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் உடல்நல சோதனைக்காக அருகில் உள்ள மனநல சோதனை கூடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஆற்றில் நீந்தச் சென்று உயிரிழந்த இந்தியர்

சாலை நடைபாதையில் உலாவும் அந்த ஆடவரின் காணொளி ஆன்லைனில் பகிரப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது. காணொளியில், அந்த நபர் பிளாக் 986C Buangkok Crescent அருகே பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்வதை காணமுடிகிறது.

மேலும், அந்த காணொளியில் அவர் முகக்கவசம் அணிந்திருப்பதும் தெரிகிறது.

நிர்வாணமாக உலாவிய ஆடவர் பொது இடத்தில் ஒழுங்கு மீறியதாக கைது செய்யப்பட்டார்.

மேலும், காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன என்றும் காவல்துறை கூறியுள்ளது.

ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர் கைது