குடும்பமே கதின்னு வந்தாங்க.. சிங்கப்பூரில் இருந்து சடலமாக திரும்பிய தமிழக ஊழியர்கள்!

singapore Foreigners mom salary
AFP

2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த வேலையிட மரணங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

இது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த பணியாளர்களின் இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இதுவரை மொத்தம் 32 ஊழியர்கள் பணியிடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த பட்டியலில், உயிரிழந்த இந்திய ஊழியர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரது உடல்களும் திருச்சி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு  கொண்டுச் செல்லப்பட்டன.

அதிலும் கடந்த ஜூன் 22 அன்று நடந்த சம்பவம் சோகமானது. Mandai குவாரி சாலையில் உள்ள Home Team Tactical Centre-ல் வேலை செய்யும் இடத்தில் மொபைல் கிரேனின் பகுதிகளுக்கு இடையில் நசுக்கப்பட்டதில் 32 வயதான இந்தியர் இறந்தார்.

இவரது பெயர் பெரியசாமி ராஜேந்திரன். அவரது மனைவிக்கு சிங்கப்பூரில் நிதி திரட்டப்பட்டு உதவி செய்யப்பட்டது.