சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) 19 வயது மாணவர் வளாகத்தில் உள்ள பிரின்ஸ் ஜார்ஜ் பார்க் ரெசிடென்சஸின் (PGPR) உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி காலை மருத்துவமனையில் மாணவர் உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் ஆடவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு
நேற்று அக்டோபர் 16ஆம் தேதி NUS மாணவர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூர் காவல்துறை (SPF) மற்றும் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படை (SCDF) ஆகிய இரண்டும் தகவல் வந்த சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்துவிட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 14ஆம் தேதி அதிகாலை 3:05 மணிக்கு உதவிக்கான அழைப்பைப் பெற்றதாகவும், பின்னர் அந்த மாணவரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) அனுப்பியதாகவும் SCDF கூறியுள்ளது.
சம்பவ இடத்தில் 19 வயது இளையர் சுயநினைவின்றி காணப்பட்டார் என்றும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
குப்பை சேகரிப்பு அறையில் இறந்து கிடந்த ஊழியர் – தொடரும் விசாரணை