சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் சிரமமான சூழ்நிலையில், மக்கள் வேலைகளை இழப்பதை தவிர்க்க சிங்கப்பூர் சம்பள மன்றம் நேற்று (16-10-2020) புதிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேலைகளைத் தக்க வைத்துக்கொள்ள ஆட்குறைப்புக்கு பதிலாக தற்காலிகமாக ஊதிய குறைப்புகளை மேற்கொள்ளலாம் என்று முதலாளிகளுக்கு சம்பள மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: ஊழியர்களை மருத்துவ சோதனைக்கு அனுப்பத் தவறிய 2 முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் ரத்து..!
இந்த சம்பள குறைப்பை மேற்கொள்ளும் முன், ஊழியர்களின் ஆதரவைப்பெற வேண்டும் என்றும், குறைக்கப்பட்ட சம்பளம் பின்னர் வழமைக்கு திரும்பி விடும் என்பதை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய வழிகாட்டிகள், வருகின்ற நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டிகள் கட்டாயமல்ல என்றாலும் அரசு இதனைக் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் சுமார் 450,000 பேருக்கு தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள்..!
சிங்கப்பூர் சம்பள மன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவரான தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் மேரி லியவ் கூறுகையில், ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும், மாற்று வேலைக்கு அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டால் இறுதி முயற்சியாக, ஆட்குறைப்புக்கு பதிலாக ஊதிய குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.