COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழந்தார் – சுகாதார அமைச்சகம்..!

one more person dies of the disease
one more person dies of the disease

சிங்கப்பூரில் நோய்த்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர் 95 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஆவார். இந்த நோய் தொடர்பான சிக்கல்களால் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) உயிரிழந்தார் என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

சிங்கப்பூரில் சம்பவம் 3145 என அடையாளம் காணப்பட்ட இருவருக்கு, ஏப்ரல் 13ஆம் தேதி COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ராஃபிள்ஸ் மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் சேர்ந்து சிங்கப்பூரில் பதிவாகியுள்ள மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : விதிமுறைகளை மீறி லாரியில் ஊழியர்களை ஏற்றிச்சென்ற 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம்..!