சிங்கப்பூரில் நோய்த்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் உயிரிழந்தவர் 95 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஆவார். இந்த நோய் தொடர்பான சிக்கல்களால் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) உயிரிழந்தார் என்று MOH தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!
சிங்கப்பூரில் சம்பவம் 3145 என அடையாளம் காணப்பட்ட இருவருக்கு, ஏப்ரல் 13ஆம் தேதி COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ராஃபிள்ஸ் மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையும் சேர்ந்து சிங்கப்பூரில் பதிவாகியுள்ள மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : விதிமுறைகளை மீறி லாரியில் ஊழியர்களை ஏற்றிச்சென்ற 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம்..!