சிங்கப்பூர் செங்காங்கில் வசிக்கும் அமிரா என்பவரின் வீட்டு வாசலில் இருக்கும் காலணிகளில் ஒன்று மட்டும் அடிக்கடி மாயமாகிக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு அமிரா குடும்பத்தாரின் விலை உயர்ந்த ஜோடிக் காலணிகளில் ஒன்று மட்டும் காணமல் போனது.
சுத்தம் செய்யும்போது துப்புரவாளர் அதனைத் தள்ளிவிட்டிருக்கலாம் என அவர்களே கூறிக்கொண்டு கோபத்தை சாந்தப்படுத்திக் கொண்டனர். எனினும் பல நாட்களாக அந்த திருடன் விடுவதாகத் தெரியவில்லை.
குடிநுழைவுக் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியருக்கு சிறை!
பின்னர், கண்காணிப்பு கேமராவின் உதவியோடு செருப்பு காணாமல் போவதற்கான காரணத்தை அமிரா கண்டுபிடித்தார். தம்மிடம் முன்பு இருந்த பூனையின் காதல் ஜோடிதான் அதற்குக் காரணம் என தெரியவந்தது.
மேல் மாடியில் வசிக்கும் நபரின் பூனை நான்காவது முறையாகக் கைவரிசையைக் காட்டுவது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்தக் காட்சியை அமிரா சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.
பூனையின் உரிமையாளர்களிடமும் அவர் நடந்தவற்றைக் கூறியதாக Mothership-இடம் தெரிவித்தார். பூனையின் கள்ளத்தனம் குறித்து அறிந்திருப்பதாகக் கூறியவர்கள், எங்கிருந்து காலணியை அது எடுத்துவருகிறது என்று தெரியாமல் திக்குமுக்காடியுள்ளனர்.
Its weird that we lost one side of our flip flops 4 times and we wonder why the thief only took one side? Guess what? We finally caught the thief 🤣 pic.twitter.com/HD4ZlSMPPf
— Mommy Aurora ✨ (@amyramrn) June 9, 2021
தம் காதல் ஜோடியைக் காணவில்லை என்பதற்காகப் பூனை தம்மைப் பழிவாங்குகிறது என்று அமிரா நக்கலாக கூறினார்.
டாக்சிகள் மற்றும் வாடகை கார்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!