தனது உறவினர் சிறுமியுடன் தகாத உறவில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ஆடவருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியுடன் 4 ஆண்டுகள் அதாவது அவரின் ஏழு வயது முதல் 11 வயது வரை தனது வீட்டின் படுக்கையறையில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த ஆடவர்.
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் இடையே விரைவு ரயில் பாதை: வெறும் 5 நிமிடத்தில் இருநாடுகளுக்கும் பயணிக்கலாம்
அதோடு மட்டுமல்லாமல் மேலும் பல்வேறு வகையான பாலியல் குற்றங்களையும் அவர் செய்துள்ளார்.
மேலும், உடலுறவுக்குப் பிறகு அந்த சிறுமியிடம், நீ ஒல்லியாக இருந்தால் அதற்கு நன்றாக இருக்கும் என்றும் அவர் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், மூன்று பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, 47 வயதான சிங்கப்பூரருக்கு வியாழன் (ஜனவரி 11) அன்று 29 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதோடு சேர்த்து, 24 பிரம்படிகளும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதேபோன்ற பாலியல் நாசம் தொடர்பாக மொத்தம் 15 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அந்த ஆடவர் மற்றும் சிறுமியின் பெயர் வெளியிடவில்லை.
சிறுமியின் பெற்றோர் விவகாரத்து பெற்று பிரிந்த நிலையில், தாய் வழி உறவான அந்த ஆடவர் வீட்டில் அவர் தங்கவைக்கப்பட்டார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆடவர், தன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் மற்றொரு அறையில் தூங்கும்போது இந்த நாச வேலையில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
சிறுமிக்கு மாதவிடாய் வரத் தொடங்கியதால், கர்ப்பம் தரிப்பது குறித்த கவலை அவருக்கு அதிகரித்தது.
பின்னர், ஏழு வயதிலிருந்தே தனது மாமா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு தோழிகளிடம் சிறுமி கூறினார்.
பின்னர் இது குறித்து காவல்துறைக்கு புகார் சென்றது.
சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு