பாயா லெபாரில் நேற்று வியாழக்கிழமை (அக்.1) டாக்ஸி சம்பந்தப்பட்ட விபத்து (Accident at Paya Lebar) ஏற்பட்டது, அதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அன்று மதியம் 3.20 மணியளவில் பாயா லெபார் ரோடு மற்றும் கெய்லாங் ரோடு சந்திப்பில் ஒரு டாக்ஸி மற்றும் இரண்டு பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தன்னுடைய கையை தானாக வெட்டிக்கொண்ட இளைஞர் கைது..!
பாயா லெபார் சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது அந்த இருவரையும் டாக்ஸி மோதியது.
அந்த விபத்தை தொடர்ந்து, 17 வயது பெண் பாதசாரி ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவு அடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் காயமடைந்த இளைஞனை, ஸ்ட்ரெச்சரில் வைப்பதற்கு முன்பு பல துணை மருத்துவர்கள் அங்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!