சிங்கப்பூரில் நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை பிற்பகல் சோவா சூ காங் பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் சுயமாக தன் கையை வெட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்த காணொளி சிங்கப்பூர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தங்கும் விடுதியில் வசிக்கும் 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தும் வசதிக்கு மாற்றம்..!
மற்றொரு காணொளியில் ஒரு பெண்ணின் முகத்தில் அதிக அளவில் ரத்தம் வருவது போல் தெரிகிறது.
மேலும், இந்த சம்பவம் நடந்தபோது ஒரு காவல்துறை அதிகாரி அருகிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது, அவர் அந்த பெண்ணுக்கு உதவியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சம்பவங்கள் குறித்த காவல்துறை அறிக்கை :
பிளாக் 409 சோவா சூ காங் பகுதியின் அவென்யூ 3இல் ஆபத்தான ஆயுதத்தால் தானாக கையை வெட்டிக்கொண்ட இளைஞனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த நபர் கைது செய்யப்பட்டு இங் டெங் ஃபாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த 27 வயது பெண் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து ஆடவர் மரணம்; குதித்துவிடுவதாக அச்சுறுத்திய பெண் ஒருவரும் கைது..!