பிலிப்பைன்ஸில் சிங்கப்பூரர் சுட்டுக் கொலை…..காவல்துறை தீவிர விசாரணை!

பிலிப்பைன்ஸில் சிங்கப்பூரர் சுட்டுக் கொலை.....காவல்துறை தீவிர விசாரணை!
Photo: Philippines National Police

 

சிங்கப்பூரரும், தொழிலதிபருமான சான் கிம் டாய் (Chan Kim Tay), பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டைச் சேர்ந்த மஃரிப் என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொண்டார். தற்போது வரை சுமார் 30 ஆண்டுகளாக பிலிப்பைன்ஸ் நாட்டிலேயே வசித்து வருகிறார்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள படங்காஸ் மாகாணத்தில் (Batangas Province) உள்ள பிரபலமான ரிச்சார்ட் நகரத்தில் உள்ள லியான் (Lian Town) பொதுச் சந்தையில் உள்ள தனது மளிகைக் கடையில் இருந்து வெளியேறினார். பின்னர் தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் கிட்ட நெருங்கிய மர்மநபர் ஒருவர், தனது துப்பாக்கியை எடுத்து சான் கிம் டாய்-யின் தலையில் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.

இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த சான் கிம் டாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?- சிங்கப்பூர் தேர்தல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்மநபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

66 வயதான சான் கிம் டாய்க்கு 28, 17 மற்றும் 7 வயது கொண்ட மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.