சிங்கப்பூரில் வெளியே செல்லக்கூடாது என்ற அறிவிப்பு குறித்து பரவும் தகவல் போலியானது : அரசு விளக்கம்..!

Coronavirus: PM Lee 'announcement' that Singaporeans can't travel beyond the area they live in is fake, says Govt
Coronavirus: PM Lee 'announcement' that Singaporeans can't travel beyond the area they live in is fake, says Govt

சிங்கப்பூரர்கள் தாங்கள் வசிக்கும் வட்டாரத்தைவிட்டு வெளியே பயணிக்க கூடாது என்று பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை இரவு (ஏப்ரல் 17) அறிவிக்கப் போவதாகப் பரவும் தகவல் பொய்யானது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Gov.sg-இன் மெசேஜிங் ஆப் சேனல்கள் மூலம் அனுப்பப்பட்ட செய்தியில், பிரதமர் லீ நாட்டு மக்களிடம் உரையாடுவாரா என்பது குறித்த தகவல்களுக்கு மக்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை அல்லது பிரதமர் லீ-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களை பார்க்க வேண்டும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

மேலும் உறுதிசெய்யப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.