“இனிய தீபாவளி வாழ்த்துக்கள்” என தமிழில் இந்திய மக்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் லீ!

(Photo courtesy: pmo.gov.sg)

“தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் ஒளிமயமான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்” என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

“இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ” என அவர் தமிழில் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனில் அக்கறை செலுத்துவதில் MOM உறுதி

இந்த ஒளிமயமான திருவிழா இருளுக்கு எதிரான ஒளிரும் வெற்றியைக் குறிப்பதாகவும் அவர் கூறினார்.

“இந்த கொண்டாட்டம் தெளிவு, ஞானம் மற்றும் அறிவு ஆகியவற்றை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.”

விருந்து உபசரிப்பு மற்றும் பிரார்த்தனைகளுக்காக குடும்பங்கள் அனைவரும் ஒன்றாக கூடும் நேரம் இது, என்றார்.

இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் மீண்டும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்த திருநாள், தீபாவளி விளக்குகளைப் போல பிரகாசமாகவும் அர்த்தமுள்ளதாகவும், மேலும் புன்னகையை உங்களுக்குக் கொண்டுவரும் என்று நம்புகிறேன், என்றார்.

முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர்