“தனிப்பட்ட சிரமங்களை வெளிக்காட்டாமல் குடும்பத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் தந்தை” – பிரதமர் லீ..!

PM Lee fathers day wishes
PM Lee fathers day wishes (Photo: Yahoo News)

தந்தையர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தந்தைகள் ஆதரவின் தூண்கள் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சிரமங்கள் எதுவாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் என்று பிரதமர் லீ தனது முகநூலை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

குறிப்பாக கடந்த சில மாதங்கள் முன்னணி மற்றும் அத்தியாவசிய ஊழியர்களாக பணிபுரியும் தந்தையர்களுக்கு சவாலாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

வேலை மாற்றங்கள் அல்லது பணிநீக்கங்களை போன்றவற்றை அவர்கள் சந்தித்துள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல தந்தைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதையும் குடும்பத்தை பராமரிக்க உதவுவதையும் பற்றி கூறியுள்ளார்.

கடினமான நேரத்தை எதிர்நோக்கும் தந்தையர், சோர்ந்துவிடக் கூடாது எனப் பிரதமர் கேட்டுக்கொண்டார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் இருப்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள் என்பதை குறிப்பிட்டார்.

தந்தையர், தாத்தாக்கள், விரைவில் தந்தை ஆக இருக்கும் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகளைப் பிரதமர் லீ தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ம் கட்டத் தளர்வு – ஆர்ச்சர்ட் ரோடு ஷாப்பிங் வட்டாரத்தில் குவிந்த மக்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg