சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை விடுப்பில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் மீண்டும் “லாக் டவுன் கட்டுப்பாடு” நடப்புக்கு வருமா? – உண்மை நிலவரம் என்ன?
இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், டிசம்பர் 19- ஆம் தேதி முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை விடுப்பில் இருப்பார். அவர் விடுப்பில் இருக்கும் காலத்தில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியென் (Senior Minister and Coordinating Minister for National Security Teo Chee Hean), டிசம்பர் 19- ஆம் தேதி முதல் டிசம்பர் 26- ஆம் தேதி வரை தற்காலிக பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.
சிங்கப்பூர் தயாரிப்பாளரின் ‘எமகாதகன்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
அதேபோல், சிங்கப்பூரின் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், டிசம்பர் 27- ஆம் தேதி முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை தற்காலிக பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.” இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.