சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தமது அணியின் தேர்தல் வெற்றிக்கு பின், அங் மோ கியோ குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று அந்த தொகுதிக்கு வருகை புரிந்தார்.
பொதுத் தேர்தலில், மக்கள் செயல் கட்சி (PAP) 61.24 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க உள்ளது.
இதையும் படிங்க : ஜொகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம்: மலேசியா – சிங்கப்பூர் தீவிர பேச்சுவார்த்தை..!
அங் மோ கியோ குழுத்தொகுதியில் பிரதமர் லீ சியென் லூங்கின் அணி, RP பொதுச்செயலாளர் கென்னத் ஜெயரத்னமின் அணிக்கு எதிராக 71.91 சதவீதம் வாக்குகளை பெற்றது.
Dropped by the Blk 724 Ang Mo Kio Food Centre to thank residents for their support, and faith in my team. Looking forward to another term of serving you! – LHL
Posted by Ang Mo Kio GRC on Sunday, July 12, 2020
பொதுத் தேர்தலில், தனது அணிக்கு வாக்களித்த குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க அங் மோ கியோ பகுதியை சுற்றி உலா வந்ததாக பிரதமர் திரு. லீ ட்வீட் செய்துள்ளார்.
Took a #jalanjalan around Ang Mo Kio Central to thank residents for voting for my team in #GE2020. Quite a nice change of pace compared to the hectic pace of campaign walkabouts! – LHL https://t.co/wtGvklEDiK pic.twitter.com/y19aysTmJ5
— leehsienloong (@leehsienloong) July 12, 2020
அங்கு மக்கள் திரு லீ அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர். அந்த தொகுதி 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் அதனை திரு. லீ வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தமிழக ஊழியர்கள்..!