சிங்கப்பூரில் 13வது பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மக்கள் செயல் கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது 93 நாடாளுமன்ற இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.
இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் ICA கட்டிடம் உட்பட 21 புதிய இடங்கள்..!
இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ் ஊழியர்கள் பிரதமர் திரு. லீ அவர்களை வாழ்த்தியும், வணங்கியும் வருகின்றனர்.
தாங்கள் இக்கட்டான சூழ்நிலையில் நிர்கதியாக நின்றபோது பாதுகாத்தது இந்த சிங்கப்பூர் என்றும், அனைத்து வசதிகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்தது இந்த அரசாங்கம் என்றும் பல்வேறு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பிரதமர் திரு லீ அவர்கள் நலமுடன் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்தும் வருகின்றனர்.
அவரது ஆட்சி என்றென்றும் தொடர வேண்டும் என்றும் பலர் விருப்பம் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் திரு. லீ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : “ஒட்டுமொத்தமாக இந்த பொதுத் தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்கின்றன” – பிரதமர் லீ..!