சிங்கப்பூரில் இரண்டு நாட்களாக 13 வயது சிறுமியை காணவில்லை

சிங்கப்பூரில் இரண்டு நாட்களாக 13 வயது சிறுமியை காணவில்லை
SPF

சிங்கப்பூரில் இரண்டு நாட்களாக 13 வயது சிறுமியை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

காணாமல் போன சிறுமி இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் அதிரடி சோதனை… சந்தேகத்தில் பிடிபட்ட 310 பேர் – போலீசார் விசாரணை

கலியாண்ட்ரா ஆம்பர் எட்மண்ட் (Caliandra Amber Edmund) என்ற சிறுமி கடைசியாக அக்.25 அன்று இரவு 8 மணியளவில் 29 Fernvale சாலைக்கு அருகில் காணப்பட்டார் என்று நேற்று (அக் 27) போலீசார் கூறினர்.

தகவல் தெரிந்த எவரும் 1800 255 0000 என்ற ஹாட்லைன் எண்னை அழைக்கலாம்.

இல்லை எனில், ஆன்லைன் வழி தகவலை சமர்ப்பிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

பிரபலமான அரிசி வகைகளுக்கு அதிரடி தள்ளுபடி – NTUC FairPrice