தெம்பனீஸ் MRT நிலையத்தில் கடைசியாக காணப்பட்ட மூதாட்டி – பொதுமக்களிடம் தகவல் கேட்கும் காவல்துறை

Stomp

தெம்பனீஸ் MRT நிலையத்தில் கடைசியாக காணப்பட்ட வயதான மூதாட்டி குறித்து காவல்துறை தகவல் கேட்டுக்கொண்டுள்ளது.

கடைசியாக ஞாயிற்றுக்கிழமை (செப் 19) அந்த நிலையத்தில் அவர் காணப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

துவாஸ் வெடிப்பு: இயந்திர குறைபாடு குறித்து ஊழியர்கள் முன்பே புகார் செய்தனர்

அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலையும் பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது.

லீ மோய் (Lee Moey) என்ற 70 வயதான அந்த பெண் கடைசியாக மாலை 5.30 மணிக்கு நிலையத்தின் பிளாட்பார்மில் காணப்பட்டார்.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness -ல் ஆன்லைனில் தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்கள் மூலம் “Work Pass” அனுமதி பெற முயற்சி – 18 பேர் கைது