சிங்கப்பூரில் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 47 வயதான ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுபற்றிய புகாரை கடந்த அக். 21ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் போலீசார் பெற்றனர்.
சினிமா திரையரங்கில் அளவில்லா இலவச பாப்கார்ன் – அண்டா, சட்டிகளோடு படம் பார்க்க கிளம்பிய ரசிகர்கள்
அதில், பிளாக் 191 பூன் லே டிரைவில் அக்.20 அன்று இரவு 11.30 மணியளவில் தன் மனைவியை ஆடவர் மிரட்டியதாக இந்த புகார் பெறப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ஆடவர் தனது மனைவியுடன் தகராறு செய்ததாகவும், கத்தியால் கழுத்தில் தாக்குவேன் என மிரட்டல் விடுத்து குரல் செய்தி அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் அந்த ஆடவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மேலும், கிரிமினல் மிரட்டல் குற்றத்திற்காக நேற்று முன்தினம் அக்.27 அன்று அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் – எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்