சிங்கப்பூரில் பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடைத் திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக வேண்டி அவர் தேடப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
“கைப்படாத பிரெஷ் உணவு, தயங்காம எடுத்துக்கோங்க” – உணவை வீணாக்காமல் பெஞ்சில் வைத்துச்சென்ற ஊழியர்
ஆகஸ்ட் 9 ஆம் தேதி புகிஸ் சந்திப்பில் உள்ள கடை ஒன்றில் திருட்டு சம்பவம் பதிவானதாக அவர்கள் தெரிவித்தனர் .
ஆகவே, அதற்கான விசாரணைக்கு உதவ அந்த பெண்ணை அவர்கள் தேடி வருகின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இல்லையெனில், www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் கொடுக்கும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.