சிங்கப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை: 29 பேர் கைது – 100 பேர் மீது விசாரணை

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

சிங்கப்பூரில் 283 மசாஜ் நிறுவனங்கள், பொது பொழுதுபோக்கு நிலையங்கள் மற்றும் இரவு கேளிக்கை நிலையங்கள் மீது காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட நூறு பேர் விசாரணையில் உள்ளனர், மேலும் அவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் விரைவில் மீண்டும் திறக்கப்படுவதை விரும்புவோர் பொறுமை காக்க வேண்டும் – அமைச்சர்

கடந்த ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 24 வரை இந்த சோதனை நடவடிக்கை நடந்ததாக காவல்துறை (அக். 2) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 192 மசாஜ் நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் சட்டத்தை மீறியதாக கண்டறியப்பட்டது.

இவற்றில் 25 முறையான உரிமம் இல்லாமல் செயல்பட்டதாகவும், மேலும் 12 பார்லர்களில் பாலியல் சேவைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

உரிமம் பெற்ற வளாகத்திற்குள் அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய தவறியதற்காக இந்த நிறுவனங்களை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் S$1,000 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

S Pass மற்றும் work permit உடைய வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வர மீண்டும் அனுமதி