செப்.30- ஆம் தேதி வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன் 1’- ஆவலுடன் காத்திருக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் பாகம்- 1’ படம் வருகிற செப்டம்பர் 30- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், ‘Madras Talkies’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளன.

இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்கள் முழுவதும் விற்று தீர்ந்தன.

‘சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2- லிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் புறப்படும் என அறிவிப்பு!’

இந்த படத்தைத் திரையரங்குகளில் காண சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உள்ளிட்டோர் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சிங்கப்பூரில் புகழ்பெற்ற கார்னிவல் சினிமாஸ் (Carnival Cinemas Singapore) திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவையும் கார்னிவல் சினிமாஸ் தொடங்கியுள்ளது. மேலும், மற்ற திரையரங்குகளிலும் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.