தகாத முறையில் பெண்களை காணொளி எடுத்த தனியார் வாடகை டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
டாக்ஸியில் வந்த மூன்று பெண் பயணிகள் மற்றும் 88 பாதசாரிகளின் upskirt காணொளிகளை அவர் எடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோ ஜுன் சியான் என்ற 36 வயதான அந்த ஓட்டுனருக்கு நேற்று (ஜன.8) 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
2022 டிசம்பர் மற்றும் 2023 மே மாதங்களுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அவரின் வாடகை டாக்ஸியில் பயணித்த 33, 35 மற்றும் 41 வயதுடைய மூன்று பெண்களின் அந்தரங்கப் பகுதிகளை படம் எடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
அதாவது, லோ தனது தொலைபேசியைப் பயன்படுத்தி அவர்களின் உள்ளாடைகள் மற்றும் முகங்களைப் படம்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.
தனது தனிப்பட்ட பாலியல் திருப்திக்காக வேண்டி அந்த காணொளிகளை லோ எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
வேலை செய்த இடத்தை விட்டு ஓடிய வெளிநாட்டு பணிப்பெண் – தேடிவரும் முதலாளி