சிங்கப்பூர் பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் திறக்கப்படும் கால அவகாசம் நீட்டிப்பு..!

Punggol Coast MRT station delayed
Punggol Coast MRT station delayed

சிங்கப்பூர் பொங்கோல் டிஜிட்டல் வட்டாரத்தின் புதிய MRT ரயில் நிலையம் திறக்கப்படும் அவகாசம் ஒரு ஆண்டுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு பாதையில் பொங்கோல் கோஸ்ட் ஸ்டேஷன் (Punggol Coast station), முன்பு 2023ஆம் ஆண்டுக்குள் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இப்போது ஒரு வருடம் கழித்து 2024இல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கப்பலில் விழுந்து காயமடையந்த ஊழியர்…SCDF உதவி.

பொங்கோல் கோஸ்ட் நிலையத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ குங் (நவம்பர் 13) புதிய தொடக்க தேதியை அறிவித்தார்.

அடுத்த கட்டமாக, ரயில் நிலையத்தின் கான்கிரீட் கட்டமைப்பை முடிக்க வேண்டும் என்றும், பின்னர் 2024க்குள் பயணிகளுக்கு அது தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா நோய்ப்பரவல் சூழல் காரணமாக இந்த புதிய ரயில் நிலைய வேலைகளைத் தற்காலிகமாக தாமதப்படுத்தியுள்ளது.

மேலும், நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளில் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனங்களில் கிட்டத்தட்ட 140 வேலையிட பாதுகாப்பு விதி மீறல்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…