பொங்கோலில் S$72,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – ஆடவர் ஒருவர் கைது

Punggol drugs seized arrested CNB
Photo: CNB

போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பான சந்தேகத்தின் பேரில் 63 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஒருவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) கைது செய்துள்ளது.

அந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் (மார்ச் 29) பொங்கோலில் உள்ள எட்ஜ்ஃபீல்ட் ப்லைன்ஸ் அருகே கைது செய்யப்பட்டார்.

நார்த் பிரிட்ஜ் சாலையில் விபத்து: ஆடவர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது..!

அங்கு சுமார் 2 கிலோ கஞ்சா போதைப்பொருள் நீல நிற பிளாஸ்டிக் பைகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மொத்தம் S$72,000 மதிப்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அதிவேக ரயில் திட்ட செலவு $102.8 மில்லியனை சிங்கப்பூருக்கு திருப்பி கொடுத்த மலேசியா..!