சிங்கப்பூர் புங்க்கோல் பீல்ட் கொலை சம்பவம்: 20 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு..!

Punggol Field murder: Mother of 20-year-old accused claims son has mental problems
Punggol Field murder: Mother of 20-year-old accused claims son has mental problems (Photo: Mothership)

சிங்கப்பூரில் புங்க்கோல் பீல்ட் சாலையில் ஒருவரை கொலை செய்ததன் தொடர்பில், 20 வயது சிங்கப்பூர் நபர் மீது கொலை குற்றச்சாட்டு நேற்று (மே 17) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சூரஜ்ஸ்ரிகன் திவாகர் மணி திருப்பதி (Suraj srikan Diwakar Mani Tripathi) கடந்த மே 16ம் தேதி அதிகாலை 2:45 மணிக்கு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் புங்க்கோல் பீல்ட் (Punggol Field) மரணம்: 20 வயதான சந்தேக நபர் கைது..!

குற்றம் சாட்டப்பட்டவர் மே 10ஆம் தேதி இரவு 11 மணியளவில் புங்க்கோல் பீல்ட் சாலையில் 38 வயது ஆடவரை குத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 38 வயதான டே ருய் ஹாவ் (Tay Rui Hao), புங்க்கோல் பீல்டில் காயமடைந்த நிலையில் கிடந்தார்.

அதனை தொடர்ந்து, அவர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்பு அங்கு அவர் காயங்களால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தனிப்பட்ட முறையில் நடந்து கொண்டதாகவும், பாதிக்கப்பட்டவருடன் குற்றவாளிக்கு அறிமுகம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் குற்றவாளி சாங்கி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் காவலில் வைக்கப்படுவார் என்றும், அடுத்த மாதம் 5ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : புங்க்கோல் பீல்டில் (Punggol Field) காயங்களுடன் கிடந்து உயிரிழந்த ஆடவர்; காவல்துறை விசாரணை தொடர்கிறது..!