வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு

Google Maps streetview

பல்வேறு இனவெறித் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 34 வயதான ஆடவர் ஒருவர், சமீபத்தில் இறந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

முகமத் அரிஸ் அன்வர் அலி என்ற அந்த ஆடவர் இனவெறி பேச்சு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்- திருச்சி, சென்னை விமானங்கள் தாமதம்.. கடும் அவதியை சந்தித்த ஊழியர்கள், பயணிகள்

குறிப்பாக, “சீன நாய்கள்” என்றும், “சீனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்ற இனவெறி வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவரின் மரணம் குறித்த செய்தியை நேற்று ஜூன் 2 அன்று போலீசார் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 5 அன்று இரவு 7:20 மணியளவில் பிளாக் 38 பெடோக் சவுத் ரோட்டில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வந்து பார்த்தபோது, அவர் பிளாட் ஒன்றில் அசையாமல் கிடந்ததாகவும், பின்னர் அவர் உயிரிழந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

இதில் ஏதும் சதிச் செயல் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

லிட்டில் இந்தியாவில் கொடுமை செய்யப்பட்ட “தமிழ் மொழி”… Google translate செய்தால் இப்படித்தான்!