ராகு கேது பெயர்ச்சியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் பக்தர்களின் பிரார்த்தனைக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்து அறக்கட்டளை வாரியம் செய்துள்ளது.
பாங்காக்கில் உள்ள சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு!
இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் 08- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு மேஷம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்.
இதையடுத்து, ஸ்ரீ சிவன் கோயிலில் பரிகார அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள், அன்றைய தினம் காலை 06.30 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரையும் அர்ச்சனை செய்துக் கொள்ளலாம்.
அபிஷேக பொருட்களும் மற்றும் பூர்ணாஹுதி தட்டு செலுத்த விரும்புவோர், காலை 09.00 மணி வரை அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.