மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்.. பின்னர் இறந்தது உறுதி – 43 வயது ஆடவர் விசாரணையில்

Redhill flat woman death police investigating
Shin Min Daily News

ரெட்ஹில்லில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மயக்க நிலையில் இருந்த 47 வயது பெண் ஒருவர் பின்னர் இறந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் காரணமாக அவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

“இனி சிங்கப்பூரில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை” – குளியலறை கதவு கீழே கைபேசியை நுழைத்து வீடியோ எடுத்த நபர்கள் – மனமுடைந்த பெண்

பிளாக் 90 ரெட்ஹில் க்ளோஸுக்கு வெளியே கடந்த அக்.4 அன்று போலீஸ் கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் காணப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

மயக்க நிலையில் இருந்த அந்த பெண், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் பின்னர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.

இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக ஏசியாஒனின் கேள்விகளுக்குப் பதிலளித்த போலீசார் கூறினர்.

“முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச்செயல் இருக்கும் என சந்தேகிக்கவில்லை.”

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு 43 வயதுடைய நபர் ஒருவர் உதவுவதாகவும் அவர்கள் கூறினர்.

விசாரணைகள் தொடர்கின்றன.

சிகரெட் தொடர்பான விவகாரம்.. தங்கும் விடுதி அருகே சட்டவிரோத செயல்… சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் 5 பேர்