கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 21) மாலை, டெக் வை அவென்யூ (Teck Whye Avenue) மற்றும் ஜலான் டெக் வை (Jalan Teck Whye) சந்திப்பில், 23 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காருடன் ஏற்பட்ட விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்து குறித்து இரவு 9.21 மணியளவில் எச்சரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் களைகட்டிய தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் – முழு தொகுப்பு..!
பிறகு, அவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்டோம்ப் வாசகர், இரவு 9.45 மணியளவில் சம்பவ இடத்தை கடந்து செல்லும்போது அவர் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதில் நீல வண்ண காருக்கு முன்பு மோட்டார் சைக்கிள் பக்கவாட்டில் கிடப்பதை அவர் அனுப்பிய புகைப்படத்தில் காண முடிகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருவரை அவமதித்ததாக இந்தியர் மீது குற்றச்சாட்டு..!
“23 வயதான பெண், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவாக இருந்தார்,” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.