“300க்கு மேற்பட்ட விலங்கினங்கள்… எழில் கொஞ்சும் அழகு” – சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ள ரைபிள் ரேஞ்ச் இயற்கைப் பூங்கா

Rifle Range Nature Park opened
Nparks

மேம்படுத்தப்பட்ட ரைபிள் ரேஞ்ச் இயற்கைப் பூங்கா (Rifle Range Nature Park) நேற்று சனிக்கிழமை (நவம்பர் 12) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

66 ஹெக்டேர் பரப்பளவில் உருவாகியுள்ள இது பரந்த மத்திய இயற்கை பூங்கா அமைப்பின் 8 வது பூங்கா ஆகும்.

“பயணிகள் ஆரோக்கியம் தான் எங்களுக்கு முக்கியம்” – சிங்கப்பூர் பேருந்து ஓட்டுனரின் நெகிழ வைக்கும் செயல்

புக்கிட் திமா நேச்சர் ரிசர்வின் தெற்கே அமைந்துள்ள இந்த பூங்கா, சுமார் 123 கால்பந்து மைதானங்கள் அளவில் பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்டுள்ளது.

அதாவது இந்த பூங்கா சுமார் 7 கிமீக்கும் அதிகமான தடங்களையும் மற்றும் மரப்பலகை பாதைகளையும் கொண்டுள்ளது.

இது முன்னாள் சின் செங் குவாரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பூங்காவில் 400 க்கும் மேற்பட்ட தாவர வகைகள் மற்றும் மலாயன் கொலுகோ, சுண்டா பாங்கோலின் மற்றும் சிறுத்தை பூனை போன்ற 300 க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் உள்ளன.

“உல்லாசம் அனுபவிக்க காசு” – கவர்ச்சி படங்களை அனுப்பி ஆண்களை ஏமாற்றிய நபருக்கு அபராதம்