8 வெள்ளி பற்றுச்சீட்டு வழங்குவதை நீட்டித்துள்ள ஃபேர்பிரைஸ் குழுமம்!

8 வெள்ளி பற்றுச்சீட்டு வழங்குவதை நீட்டித்துள்ள ஃபேர்பிரைஸ் குழுமம்!
Photo: FairPrice

 

கடந்த ஜனவரி 03- ஆம் தேதி அன்று ஃபேர்பிரைஸ் குழுமம் (FairPrice Group) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “ஒரே பரிவர்த்தனையில் சுமார் 80 வெள்ளி சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை (CDC Vouchers) பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் எதாவது ஒரு பேரங்காடிக்கு சென்றுப் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 8 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 90 நாட்கள் சிறப்பு விசா – “முய் தாய்” பயிற்சியுடன்..

பற்றுச்சீட்டுகள் கிடைக்கப் பெற்ற 24 மணி நேரம் கழித்து, அந்த பற்றுச்சீட்டுகளை ஸ்பேர்பிரைஸ் பேரங்காடிகளில் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த பற்றுச்சீட்டு வரும் பிப்ரவரி 29- ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவலை அறிந்த சிங்கப்பூரர், ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்கு சென்று சமூக மேம்பாட்டு பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே சமூக மேம்பாட்டு பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கியதுடன், ஃபேர்ப்ரைஸ் பற்றுச்சீட்டுகளையும் வாங்கிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சகோதரியை நாசம் செய்த அண்ணன்.. ஒன்றாக படுக்க அனுமதித்த தாய் – 7 ஆண்டுகள் நடந்த கொடூரம்

இந்த நிலையில், ஃபேர்ப்ரைஸ் குழுமம் இன்று (ஜன.17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாடிக்கையாளர்களின் அன்றாட செலவினங்களைக் குறைத்துக் கொள்ள உதவும் வகையில், ஃபேர்ப்ரைஸ் குழுமம் பற்றுச்சீட்டுகள் வழங்கும் திட்டத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஜனவரி 24- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.