ஜன்னல் விளிம்பில் நின்ற சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது!

SCDF awarded foreign workers
SCDF awarded foreign workers (PHOTO: SCDF/Twitter)

சிங்கப்பூரில் HDB குடியிருப்பு ஒன்றின் சமையலறை ஜன்னல் விளிம்பில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்த சிறுவனை வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பத்திரமாக காப்பாற்றினார்.

இந்நிலையில், அவருக்கும் அவருடன் உதவி புரிந்த மற்றொருவருக்கும் சமூக காப்பாளர் விருது (Community Lifesaver Award) இன்று வழங்கப்பட்டுள்ளது.

(PHOTO: SCDF/Twitter)

திருச்சி-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு…!

திரு தாஸ் திப்டோ (Das Dipto) மற்றும் திரு பிஸ்வாஸ் ஜிபோம் (Biswas Jibom) ஆகியோரின் வீரச் செயலுக்காக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) இந்த விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.

இதனை ட்விட்டர் கணக்கில் தெரிவித்த SCDF அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜனவரி 3 அன்று காலை 7:50 மணியளவில் பிளாக் 243 ஹௌகங் ஸ்ட்ரீட் 22இல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு: “சிறுவனை காணும்போது என் மருமகன் நினைவு வந்தது” – சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…