ஜூரோங் வெஸ்ட்டில் ஆடவரை கத்தியால் குத்திய வழக்கில் இரண்டாவது சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு..!

Second suspect charged over Jurong West stabbing incident
Second suspect charged over Jurong West stabbing incident

சிங்கப்பூர் COVID-19 “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் அதிரடி நடவடிக்கையின் போது, ஜுராங் வெஸ்டில் கத்திக் குத்து சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றம் (ஜூலை 15) சாட்டப்பட்டுள்ளார்.

28 வயதான தியோ ஷூ ரென் என்பவர், கடந்த மே 10 அன்று இரவு 7 மணியளவில், 26 வயதான தியோ ஜியா வெயி என்பவரை தானாக முன்வந்து கத்தியால் குத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேக்கா நிலையம், ஆப்பிள் ஆர்ச்சர்ட் ரோடு உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

மேலும், 22 வயதான எட்மண்ட் காம் வீ லியாங் என்பவருடன் உடந்தையாக தியோ செயல்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதில் கத்தியைப் பயன்படுத்தி உடல் மற்றும் தலையில் பல முறை குத்தியதாக தியோ ஷூ ரென் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தியோ காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

வரும் 22ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணையை அவர் எதிர்நோக்குவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அத்துடன் அபராதமோ, பிரம்படியோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க : ஜூரோங் வெஸ்ட்டில் ஆடவரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg